வாழு,வாழவிடு.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg

ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!

MATTER & DARK MATTER ஒரு கண்ணோட்டம்.

MATTER & DARK MATTER ஒரு கண்ணோட்டம்.

வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத 'dark matter' தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது.

அது என்ன என்பதை அறிய பிரபஞ்சத்துக்குள் போய் பார்க்க வேண்டியதில்லை.. அணுவைக் குடைந்து.. அதனுள் உள்ள சிறிய துகளையும் குடைந்து பார்த்தால் முடியும் என்று நம்பி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்த LHCல் வைத்து புரோட்டான்களை உடைக்கும் சோதனை ஆரம்பித்தது 2008ம் ஆண்டு இறுதியில். ஆனால், இந்த சோதனை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அந்த எந்திரத்தில் ஏராளமான கோளாறுகள். அதையெல்லாம் சரி செய்யவே 1 வருடம் ஆகிவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் LHC மீண்டும் இயங்க ஆரம்பித்தது. நேற்று தனது முழு வேகத்தை எட்டிப் பிடித்தது.

இது பல்லாண்டுகள் நீடிக்கும் சோதனை.. இது கடவுளின் அணுத் துகளை வெளியே கொண்டு வரலாம் அல்லது நாம் சற்றும்
எதிர்பார்க்காத ஏதாவது ஒன்றையும் வெளிக் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

அண்டம் -UNIVERSE

              அண்டம் -UNIVERSE


     நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது 


  கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட 


 சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy  


       (பால்வெளி மண்டலம்).




         
பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் 


கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து 

விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான 

விஷயம்.


     


ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் 


  சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் 


    உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் 


   ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் 


  ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே 
பிளாக் ஹோல்களும்.இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல,  


சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.


      ஒளி-ஒலி உள்பட.பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் 


சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் 


ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

மிகப்பெரிய அணு சோதனை உலகம்

பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள் !








     ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையம் இது. பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில் 300 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
        நீள்வட்ட வடிவில் உள்ள அந்த நிலையத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் அணு விஞ்ஞானிகள் (இயற்பியலாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு முனைக்கும் அடுத்த முனைக்கும் இடையிலான தூரம் மட்டும் 27 கி.மீ.
      கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சி திட்டத்தின் மொத்த செலவுத்தொகை ரூ.36 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்). பெரிய தூண் போன்ற அளவில் உள்ள இரண்டு அணுக்களை மணிக்கு ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் மோதச்செய்து ஆராய்ச்சி நிலையத்துக்குள் பிரளயம் ஏற்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் முக்கியப்பணி.
       இதன் மூலம் ஏராளமான அணுக்கள் தோன்றி பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக பெரிய உயிரினங்கள் எப்படி தோன்றுகின்றன என்று ஆராய்வதே இதன் நோக்கம். 


அதாவது பூமிக்கு அடியில் மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது.
      அணுக்களை மோதச்செய்யும் இந்த சோதனையால் நிலத்துக்கு மேலேயும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


     இந்த சோதனையின் விளைவாக உலகமே அழிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே ரூ.36 ஆயிரம் கோடியை செலவு செய்து ரிஸ்க்கான ஆராய்ச்சி செய்வதை கைவிடுங்கள்என்று எஸ்.எம்.எஸ். இ-மெயில் மூலமாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் மறுத்து விட்டனர்.

கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் பரிசுகள்

கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் பரிசுகள்


      அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஸீபோர்க்கை 1961 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதி [Chairman, Atomic Energy Commission] ஆக்கினார்! ஸீபோர்க் அப்பதவியில் பத்து வருடங்கள் [1961-1971] பணி யாற்றினார்.


     அவர் காலத்தில்தான் ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவில் அணு மின்சக்தித் தொழிற் திட்டங்கள் பல முளைத்தெழுந்து, நூற்றுக் கணக்கான அமெரிக்க அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவிலும், அகில நாடுகளிலும் நிறுவனம் ஆகி வேரூன்றின!







          ஸீபோர்க் 1951 இல் ரசாயனத்துக்கு நோபெல் பரிசு பெற்றார். 1959 இல் அமெரிக்காவின் மதிப்புயர்ந்த 'என்ரிகோ ஃபெர்மிப் பரிசு' [Enrico Fermi Award] ஸீபோர்க்கு அளிக்கப் பட்டது.


     மற்றும் ஸீபோர்க் 1948 இல் அமெரிக்க சுவீடிஷ் எஞ்சினியர்கள் அளித்த 'ஜான் எரிக்ஸன் தங்கப் பதக்கம்', அமெரிக்க ரசாயனக் குழுவினரின் 'நிகோலஸ் பதக்கம்',


     1957 இல் அமெரிக்க ரசாயனத் தொழிற்துறைகளின் 'பெர்கின் பதக்கம்' 1963 இல் ஃபிலடல்ஃபியா ஃபிராங்கலின் ஆய்வுக்கூடம் அளித்த 'ஃபிராங்கலின் பதக்கம்' ஆகியவற்றையும் பெற்றார்!


1994 ஆம் ஆண்டில் ஸீபோர்க் முன்பு [1940-1955] செயற்கை முறையில் ஆக்கிய உன்னில்ஹெக்ஸியம் [Unnilhexium(106)] மூலகம் அவரது பெயரில் 'ஸீபோர்கியம்' [Seaborgium (SG)] என்று பெயரிடப் பட்டது !






Seaborg & McMillan

  சிகாகோ பலகலைக் கழகத்திற்கு ஸீபோர்க் அவரது 30 ஆவது பிறந்த நாளன்று [1942 ஏப்ரல் 19] வந்து சேர்ந்தார்.


         டிசம்பர் 2 ஆம் தேதியில் என்ரிகோ ஃபெர்மி முதல் யுரேனிய அணு உலையில் அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] நிகழ்த்திக்குக் காட்டிய பின், பிளவுப் பண்டங்களைப் பிரித்துப் புளுடோனியத்தைத் தனித்தெடுப்பது, ஸீபோர்க்கின் பொறுப்பானது!


        அணு உலைகளிலும், சுழல்வீச்சு இயந்திரங்களிலும், இரவு பகலாய் யுரேனியத்தை நியூட்ரான்களால் தாக்கித் தேவையான புளுடோனியம் 'ஃபாட் மான்' அணுகுண்டு தயாரானது!





                                     Nobel Prize Winners

                                  Seaborg & McMillan




       நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸில் 1945 ஜூன் 11 ஆம் தேதி அணு ஆயுதங்கள் தயாராக இருந்த தருவாயில், உடன் பணி செய்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஃபிராங்க் [James Franck (1882-1964)] குழுவினருடன் தானும் சேர்ந்து, ஜப்பானில் அணுகுண்டு போடப் போவதைத் தடுக்க ஸீபோர்க் முயன்றார்!

         1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானியருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று கருதினார்! 

       அக்கருத்தை வலுயுறுத்த 'ஃபிராங்க் விண்ணப்பம்' என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்கு [Secretary of War, Stimon] அனுப்பினார்!

விண்ணப்பத்தின் அறிவிப்பு இதுதான்: 'முன்னெச்சரிக்கை எதுவு மின்றி ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் போடுவது, நியாய மற்றது என்று நாங்கள் நம்புகிறோம்!
   
  மனித இனத்தின் மீது கருணை எதுவு மின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும்! 

அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும்! அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும்! மனிதரற்ற ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, 

அங்கே அணுகுண்டை வெடித்துக் காட்டி ஜப்பானுக்கு முன்பாகவே எச்சரிக்கை செய்தால், பலனுள்ள சேதார மற்ற, வெற்றிகரமான சமாதானத்தைச் சாதிக்க முடியும்' 






                         Nagasaki Bombing




       யுத்தச் செயலாளரோ, அல்லது ஜனாதிபதி ட்ரூமனோ அந்த முக்கிய விண்ணப்பத்தைப் படித்ததாக அறியப் படவில்லை! அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது!

      ஜேம்ஸ் ஃபிராங்க், கெலென் ஸீபோர்க் குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தாலும், ஜப்பானில் அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் கோரச் சேதங்களைத் தடுக்க முற்பட்டோம் என்று மன ஆறுதல் அடைந்தனர்!

உலக ஹிரோஷிமா தினம்



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -ஈரோடு மாவட்டம்.

அன்பு நண்பர்களே, 
taminaduscienceforumthalavadi.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை  வரவேற்கிறேன்.
                  66-ஆம் ஆண்டு உலக ஹிரோஷிமா தினம்
         
             
                                                   
                                              Liitle Boy (code name) மற்றும்  
                                              Fat Man(codename)               



        இரண்டாம் உலகப் போரின்போது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 06-ந்தேதி அன்று   அமெரிக்காவின் முதல் அணுகுண்டு தாக்குதலால் ஜப்பான் நாட்டின் "ஹிரோஷிமா" மற்றும் "நாகசாகி" நகரங்கள் மிகக்கடுமையான உயிர்ச்சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் ஆளாகிய  ( இன்றும் அந்நகர மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றனர்) 
  
    
         உலகையே நடுங்கச்செய்த இதன் 
நினைவுநாள்ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் ஆறாம் ஆம் தேதி  "உலக ஹிரோஷிமா தினம்''  கடைப்பிடிக்கப்படுகிறது.  அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்குஅஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கஉணர்த்தும் நாளாகவும், இத்தினம்
  அனுசரிக்கப்படுகிறது.
 

       அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில அளவிலான கட்டுரை,கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தியது.-TNSF-ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 
        'அணுசக்திகள் ஆக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்'  
        என்ற கருத்தினை மையப்படுத்தி 20-08-2011க்குள் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் சேரும் வகையில் 
        மாநில அளவிலான ஓவியம்,கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.அதாவது
         
       (1) பள்ளி மாணவ,மாணவியர் ஆறாம்,ஏழாம்,எட்டாம் வகுப்பு பயில்பவருக்கு ''போரின் பிடியில் பிஞ்சுகள்'' என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும்,
          (2)ஒன்பது முதல் +2 வரையிலான மாணவ,மாணவியருக்கு 'இது போல் துயரம் இனிமேல் வேண்டாம்' என்ற தலைப்பில் கட்டுரையும்,
        (3) கல்லூரி மாணவ,மாணவியருக்கு ''அன்னை பூமியில் அமைதி தவழட்டும்'' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் 
        (4) ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு ''அணு ஆயுதப் போட்டியும், மானுடத்தின் தலைக்குனிவும்'' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் நடத்தப்பட்டன.
    
       போட்டிகளின்  ''ஈரோடு மாவட்ட முடிவுகள்'' ஆசிரியர் தினமான 05-09-2011 இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திரு ; N.நடராஜன் -ஈரோடு அவர்களால் அறிவிக்கப்பட்டது. 
    
    ;-ஈரோடு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்;-
  
           (1) ஓவியப்போட்டி-ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கானது.
          தலைப்பு= போரின் பிடியில் பிஞ்சுகள்.

   முதல் இடம் =     K.R.ராகுல்ராஜா,-(Bharathi Vidya Bhavan Matric School-Erode )

   இரண்டாம் இடம்=அபினேஷ், 6 th "E"-(U.R.C.Palaniyammal Matric school - Erode)

    மூன்றாம்இடம் =U.ராகிணி , 6th "E" - (Bharathi Vidya Bhavan Matric School -Erode )


      (2) ஆசிரியர்கள்  மற்றும் அலுவலர்களுக்கான கட்டுரைப்போட்டி
   தலைப்பு;- அணு ஆயுதப்போட்டியும்,மானுடத்தின் தலைக்குனிவும் 

      முதல் இடம்=   மரியாதைக்குரிய; R. ராதா அவர்கள்-
                                (U.R.C.Palaniyammal Matric school-Erode)

     இரண்டாம்இடம் = திரு; C.பரமேஸ்வரன்,
              (  TamilNadu State Transport Corporation-Thalavadi Branch-Erode division )

        மூன்றாம் இடம் = திரு;S.T.ஐயப்பன், அவர்கள்,
                      (Sathyamangalam )

     
     (3) ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான                                           மாணவர்களுக்கானகட்டுரைப் போட்டி
    தலைப்பு ;-இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம்.
  
      முதல்இடம்= C.உதயக்குமார், +1 - B (Biology)
           U.R.C.Palaniyammal Matric School_Erode)
    
     இரண்டாம் இடம்=G.பிருந்தா, 9-th Std "F"
         U.R.C.Palaniyammal Matric School - Erode )
   
     மூன்றாம் இடம்=G.கண்ணன்,
   
       (4) கல்லூரி மாணவர்களுக்கான  கவிதைப் போட்டி.
      தலைப்பு ;- அன்னை பூமியில் அமைதி தவழட்டும்.
  
          முதல்இடம்= நேசவேணி,
             ( Kongu Engineering College -Erode )
  
      இரண்டாம்இடம் = K.அருள் பிரசன்னா,
         ( Kongu Engineering College - Erode )
  
        மூன்றாம் இடம் = V.ஜெயப்பிரியா,
          (Vellalar College - Erode )
   

          ஜாதி,மத,மொழி, இன, வேறுபாடின்றி அனைவரும் மனித சமூகம் என மனித நேயம் போற்ற வேண்டும்.
    சமூக முன்னேற்றத்திற்காகவும்,நாட்டின் நலனுக்காகவும், அனைவரின் சிந்தனை இருக்க வேண்டும் .
     சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க வகை செய்யவேண்டும்,
      இந்த இயற்கையினை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதனையும் அனைவரும் உணர வேண்டும்,உணரச்செய்ய வேண்டும்.



     முதல் அணுகுண்டு சில தகவல்கள்.
      ஹிரோஷிமா, நாகாசாஹி நகரங்களின் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு வெடிப்பு உலகப்பிரசித்தம். இன்னமும் கூட அணுகுண்டு வெடித்த இடத்தில் பாதிப்பின் சுவடுகள் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் இந்த அணுகுண்டு வெடிப்புக்கு பின் மிகப்பெரிய ராஜதந்திரம் இருந்தது. அதை நடத்தியவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹேரி எஸ்.ட்ரூமன்.ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஹேரி எஸ்.ட்ரூமன் உதவி ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி வகிப்பவர் இறக்க நேரிட்டால் உதவி ஜனாதிபதிஉடனே நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ரூஸ்வெல்ட் மாரடைப்பால் இறந்த பின் உதவி ஜனாதிபதி ட்ரூமன் அமெரிக்காவின் 33 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்ற ஒரு மாதத்துக்குள் உலகப்போரில் உலகநாடுகளை ஆட்டிப்படைத்து வந்த ஜெர்மனி நாடு தோல்வி கண்டு நேச நாடுகளில் சரண் அடைந்தது. ஐரோப்பாவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஜப்பான் மட்டும் தொடர்ந்து போராடி வந்தது. சீனாவை தனது ஆதிக்கத்திலேயே வைத்திருந்தது. பசிபிக் கடலில் இருந்த தீவுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் சந்திக்காத இக்கட்டான மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு ட்ரூமன் முடிவு காண வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர ஜப்பானை உடனடியாக சரணடைய செய்ய வேண்டும். அதற்கு ஜப்பான் நாட்டின் மீது அணு குண்டுகளை பயன்படுத்துவதை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் ட்ரூமன் ஒருவரிடம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.அணுகுண்டை பயன்படுத்தாவிட்டால் ஜப்பான் நாட்டை தோற்கடிக்க மேலும் பல மாதம் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். அமெரிக்காவில் லட்சக்கணக்கான போர் வீரர்களை ஜப்பான் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த வேண்டியிருக்கும். ஜப்பான் நாட்டின் மீது தொடுக்கப்படும் போரில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கா, இங்கிலாந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் போர் வீரர்கள் உயிரிழக்க நேரிடும். மேலும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்கு நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். தன் நாட்டிற்கும், தன் கூட்டணி நாடுகளுக்கும்ஏற்படும் உயிரிழப்புகளையும் பொருள் சேதத்தையும் தடுத்து நிறுத்த ட்ரூமன் அணுகுண்டுகளை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்தார். அங்கீகாரம் கொடுத்த சில மணி நேரத்தில் லிட்டில்பாய்’(LITTLE BOY) என்ற முதல் அணுகுண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து பேட்மேன்’(FAT MAN) என்ற இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது, அவ்வளவுதான் ஜப்பான் ஆடிப்போய் விட்டது. உடனே போர் நிறுத்தம் செய்தது. அமெரிக்காவிடம் சரண் அடைந்தது.
இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது 
  
   


    

        மரியாதைக்குரிய ஐயா;சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா







            Glenn Seaborg       
                    (1912-1999)

        LITTLE BOY(codename) மற்றும் FATMAN(code name) இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை

  முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 ! இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 !
புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க்! 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க்! அதற்குப் 'புளுடோனியம்' என்று முதலில் பெயர் வைத்தவரும், ஸீபோர்க்!





               Plutonium Bomb

       
ஸீபோர்க் கண்டு பிடித்த போது, அந்த உலோகம் அதி விரைவில் தீவிர அணு ஆயுதத்துக்குப் பயன்படப் போவதையோ அல்லது ஆக்க வினைகளில் எதிர் காலத்தில் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படப் போவதையோ அவர் எள்ளளவும் அறிய மாட்டார்! அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது! சிக்கனச் செலவில் ஆக்க வல்லது! சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது! அரிய அணுசக்தி மூலகம் 'புளுடோனியம்' கண்டு பிடித்ததற்கு 1951 ஆம் ஆண்டு டாக்டர் கெலென் ஸீபோர்க் அவரது துணையாளி டாக்டர் எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] ஆகியோர் இருவரும் ரசாயன விஞ்ஞானத்துக்கு மகத்தான நோபெல் பரிசைப் பெற்றார்கள்!





                         Glenn Seaborg